தற்போது பெண்கள் மீதான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. இந்த நிலையில் பெண்கள் தங்களை தற்காத்து கொள்ளும் விதமாக ஒரு புதிய சாப்ட்வேர் செல்போனில் வந்துள்ளது. இந்த சாப்ட்வேரை பயன்படுத்த செல்போன் மட்டும் இருக்க வேண்டும்.
அதில் ‘சேப் டிராக்’ என்ற அப்ளிகேசனை பதிவிறக்கம் செய்து வைத்தால் போதும். இதனை பதிவிறக்கம் செய்த முதல் நாளிலே பயனாளியின் முழு விவரமும் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு சென்று விடும். மேலும் இதன் மூலம் பயனாளி தனது உறவினர், நண்பர்களுக்கு இந்த சாப்ட்வேரை பயன்படுத்தச் சொல்லலாம்.
அவ்வாறு செய்தால் பயனாளியை பற்றிய விவரம் அவர்களையும் சென்றடையும். தற்போது திருப்பூரில் இந்த சாப்ட்வேர் சோதனை முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதை பயன்படுத்தும் மாணவிகள், வேலைக்கு செல்லும், வீட்டிலிருக்கும் பெண்கள் ஒரு ஆபத்தில் சிக்கிக்கொள்ளும் போது, செல்போனில் உள்ள சாப்ட்வேர் பட்டனை மட்டும் அழுத்தினால் போதும்.
அதிலிருந்து தானாகவே எஸ்.எம்.எஸ். காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கும், இதே சாப்ட்வேர் வைத்திருக்கும் உறவினர், நண்பருக்கும் சென்றுவிடும். இந்த வகை சாப்ட்வேர் வைத்திருப்பவரை காவல்துறை எப்போதும் கண்காணிக்காது.
ஆபத்து காலங்களில் இந்த வகை செல்போன் வைத்திருப்பவர்கள் அந்த பட்டனை அழுத்தினால் மட்டுமே அவர்களை காவல்துறை கண்காணிக்கும். பயனாளியின் விவரங்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும். இந்த சாப்ட்வேர் சேவையை ஜி.பி.எஸ். வகை செல்போன்களில் தான் பயன்படுத்த முடியும்.
மற்ற செல்போன்களில், இன்டர் நெட் வசதியுள்ள போன்களில் இந்த சாப்ட்வேரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஜாவா வகை செல்போன்களிலும் இதனை பதிவிறக்கம் செய்யலாம்.
கீழே கொடுக்கப்பட்ட இணைய தள முகவரியில் தொடர்பு கொண்டு இந்த அப்ளிகேஷனை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். காவல்துறை பெண்கள் பாதுகாப்புக்கான புதிய சாப்ட்வேரை உருவாக்கி இருப்பது இந்தியாவிலேயே இதுதான் முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
டவுன்லோட் செய்ய
Post Given by Ganesh Kumar
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.